திருமருகலில் கம்யூனிஸ்ட் கட்சியினர்
மத்திய பட்ஜெட் கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் திருமருகல்
பஸ் தபால் நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு ஆகியோர் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார். இதில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.