நாகப்பட்டினம்: தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்; ஆட்சியர் தகவல்

73பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் 13.05.2025 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் உடன் இணைந்து பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 13.05.2025 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இம்முகாமில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மாநில போக்குவரத்துக் கழகம் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமில் கலந்துகொண்டு தொழிற்பயிற்சி முடித்த பயிற்சியாளர்களை தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேர்வு செய்யவுள்ளனர். 

எனவே, இம்முகாமில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு 04365250126 என்ற தொலைபேசி எண்ணிலும் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி