நாகப்பட்டினமும் ஒன்றாகும். ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான 61 நாட்கள் மீன் பிடித் தடைக்காலம் நடைமுறையில் உள்ளதால் பெரிய அளவிலான விசைப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உயர் ரக மீன்களான வஞ்சிரம் காலா வவ்வா கொடுவா சீலா சுரா இரால் நண்டு உள்ளிட்ட ரகங்கள் கிடைக்காத நிலையில் கிடைக்கும் குறைந்த அளவிலான சிறிய ரக மீன்களுக்கு அதிக கிராக்கி உள்ளதால் விலையும் அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பான்மையான மீன் பிரியர்கள் பெருத்த ஏமாற்றமடைந்து வரும் நிலையில் அவர்களுக்கு உள்ள ஒரே ஆறுதல் தங்கள் விரும்பும் மீன்களின் கருவாடுகள் தற்சமயம் நாகப்பட்டினத்தில் தராளமாய் கிடைப்பது தான்.
நாகப்பட்டினத்தை பொருத்தவரையில் பெரிய மார்க்கெட் பாரதிமார்க்கெட் நாகூர் மார்கெட் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் வாஞ்சூர் சோதனை சாவடி புத்தூர் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் கருவாடு வியபாரம் நடைபெற்று வருகின்றது.
மீன்களையே விரும்பி சாப்பிடும் தங்களுக்கு விரும்பும் மீன்கள் தற்சமயம் கிடைக்காத நிலையில் 6 சநாட்களுக்கு கருவாடுகளை மட்டுமே வாங்கி சென்று விரும்பி உண்கின்றனர்
மீன் பிடித் தடை காலம் தற்சமயம் நடைமுறையில் உள்ளதால் 3மாதங்களுக்கு முன்பே மீன்களை வாங்கி கருவாடு தயாரித்து வைத்திருந்து தற்சமயம் விற்பனை செய்து வருவதாக கருவாடு விற்பனை செய்யும் பெண்கள் கூறுகின்றார்