திருமருகலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
திருமருகலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஒன்றிய தலைவர் வரதராஜன், ஒன்றிய பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். 

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் பாபுஜி, ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஏ.ஐ.டி.யு.சி ஒன்றிய செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினர். இதில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 100 நாள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும், 

100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், 100 நாள் ஊதியத்தை 700 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி