மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 575 மனுக்கள் பெறப்பட்டன.

66பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 575 மனுக்கள் பெறப்பட்டன.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல், கொங்கராயநல்லூர், ஏர்வாடி, இடையாத்தங்குடி, சேஷமுலை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று அம்பல் ஊராட்சி பொறக்குடியில் நேற்று நடந்தது. முகாமிற்கு தனித் துணை ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன், தாசில்தார் ராஜா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி வரவேற்றார். முகாமில் குடிநீர், சொத்து வரி, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கால்நடை துறை, மீன்வளத்துறை, மருத்துவமுகாம், தாட்கோ வங்கி கடன் உள்ளிட்ட 32 வகை சேவைகளை மக்கள் ஒரே இடத்தில் பெரும் வகையில் துறைகள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் சுமார் 575 மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், ஜவகர், தோட்டக்கலை உதவி இயக்குனர் கண்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா, வருவாய் ஆய்வாளர்கள் ரம்யா, ராஜேஸ்வரி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவணஐயப்பன்,
பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி