மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2003 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் கட்டாய மதமாற்ற சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜராகாத நிலையில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை இந்நிலையில் இன்று அந்த வழக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிபதி ஆர் விஜயகுமாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது திருமாவளவன் உள்ளிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பிடிவாரெண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார் இதனால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது