மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருநாங்கூர் கிராமத்தில் வண்புருஷோத்தம பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட இந்த ஸ்தலத்தில் வந்து தரிசிப்பவர்களுக்கு பசிப்பிணி நீங்கும் என்பது ஐதீகம். சிறப்புமிக்க இக்கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் செய்யப்பட்டு புனித நீர் கொண்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து கருட கொடி ஏற்றப்பட்டது.