மயிலாடுதுறை அடுத்த திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத்தை தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டதில் சுமார் ஒரு கிலோ அளவிலான கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வீரமணி (27), அபிஷேக் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.