மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரதான சாலைகளில் அதிக அளவு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகிறது. இந்த நாய்கள் கூட்டங்கள் சாலைகளில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், மாணவிகள், வயதானவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களை விரட்டிச் சென்று கிடைக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இதனால் சாலைகளில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.