மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்தில் உட்பட்ட பெரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் ஆட்சியர் மகாபாரதி அமர்ந்து உணவு அருந்தி உணவில் தரம் ருசி குறைத்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.