மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி பிடாரி வடக்கு வீதியில் கழிவுநீர் கால்வாய் பாதை அடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க பணியில் ஈடுபட்டனர்.