மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறப்பு

76பார்த்தது
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு கூரைநாடு எடத்தெருவில் வெற்றி விநாயகர் கழிவு நீர் வண்டி மழை நீர் வடிகாலில் கழிவு நீரை திறந்து விட்டு செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ள பொதுமக்கள் கழிவுநீர் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி