மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராகவும் முன்னாள் கவுன்சிலர் ஆன அருண்குமார் என்பவர் அப்பகுதி பிரபல ஜோதிடர் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாசிலாமணி நாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த போது மர்ம நபர்கள் அவர் மீது பெட்ரோலிய பொருளை ஊற்றி தீ வைத்தனர். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அருண்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தஞ்சை மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தபோது சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். இந்த வழக்கை பொறையார் காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் இதுவரை சந்தேகப்படும் குற்றவாளிகள் யாரையும் கைது செய்யவில்லை. காவல்துறையின் எத்தனை போக்கை கண்டித்து இன்று பொறையாறு பேருந்து நிலையம் அருகே மயிலாடுதுறை சாலையில் இறந்த அருண்குமார் சடலத்துடன் உறவினர்கள் நண்பர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அருண்குமார் உறவினர்கள் இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர் இதன் பெயரில் சாலை மறியலை கைவிட்டு சடலத்தை அடக்கம் செய்ய ஊர்வலமாக கொண்டு சென்றனர்.