மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அடுத்துள்ள காத்தான் சாவடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சோனவன் தோட்டம் கிராமத்தில் இணையும் சாலை கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இவ்வழியில் வாகனங்களில் செல்லும் போது சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இச்சாலையை விரைவில் சீரமைத்துத் தர காத்தான் சாவடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.