மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் உள்ள முதலியார் குளம் சீர்காழி நகர் குடியிருப்பு வாசிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் அவற்றை அளவீடு செய்து அகற்றி குளத்தை தூர்வாரி சுத்தம் செய்திட வேண்டும் என பசுமை சேவை சங்கம் சார்பில், அதன் தலைவர், பொறியாளர் சுப்ரமணியன் மற்றும் பொறுப்பாளர்கள் நகராட்சி மேலாளர் பூங்குழலி, நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.