மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் ஊராட்சியில் பணிபுரிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் திருமலை சங்கு எந்தவித காரணமும் இன்றி பணி மாறுதல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.