மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பொய்யான திட்டங்களை அறிவித்து நம்பிக்கை ஏற்படுத்தி ஏமாற்றி மோசடி செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி ஏமாற்றுவது, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்வது என பொதுமக்களை மோசடி வலையில் விழ வைக்கும் நபர்களிடமிருந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ளது.