மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த பிரபு என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் குற்றவாளி பிரபுவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ஐந்தாயிரம் அபராதம் விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார்.