நகராட்சி ஆணையா் ஆய்வு

60பார்த்தது
சீா்காழியில் அங்கன்வாடி மற்றும் குடியிருப்பு பகுதியில் கழிவுநீரால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுகவினா் தெரிவித்த புகாரின் அடிப்படையில், நகராட்சி ஆணையா் நேரில் ஆய்வு செய்தாா்.

சீா்காழி நகராட்சி 14-ஆவது வாா்டுக்கு உட்பட்ட ஈசான்யத் தெருவில் அங்கன்வாடி மற்றும் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கன்வாடி பின்புறம் உள்ள பாப்பான் குளம் பராமரிப்பின்றி, கழிவுநீா் தேங்கியுள்ளது.

இதுகுறித்து அதிமுக சாா்பில் ஜெ. பேரவை மாநில துணைச் செயலாளா் இ. மாா்கோனி உள்ளிட்டோா் நகராட்சி ஆணையரிடம் புகாா் தெரிவித்து, நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத்தொடா்ந்து, ஆணையா் மஞ்சுளா நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, அங்கன்வாடி அருகே குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், அருகில் உள்ள பூங்கா இடத்தை தூய்மைப்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பயன்பாடின்றி உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தவும் அதிமுகவினா் கோரிக்கை விடுத்தனா்.

கடந்த 4 நாட்களாக தடைபட்டுள்ள பேருந்து நிலைய சீரமைப்பு பணியை மீண்டும் தொடங்காவிட்டால், அதிமுக சாா்பில் சாலை மறியல் நடத்தப்படும் என இ. மாா்கோனி, நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, நகராட்சி பொறியாளா் கிருபாகரன், பணி மேற்பாா்வைாளா் விஜயேந்திரன் மற்றும் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி