மயிலாடுதுறையில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் தலைவர் சாக்கோட்டை அன்பழகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 250 கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்களை மாவட்டத்தில் செயல்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பொது மக்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவித்து நிறைவேற்றி தரப்படும் எனவும் தெரிவித்தார்.