மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள காவிரி துலாக் கட்டத்தை துப்புரவு செய்யும் படி நேற்று தீவிரமாக மயிலாடுதுறை நகராட்சியில் பணிப்புரியும் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களைக் கொண்டே நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் மண்டிக்கிடந்த குப்பைகளை அகற்றினர். மேலும் புனித தளமாக கருதப்படும் காவிரி துலா கட்ட பகுதியை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.