மூன்று யானைகள் மேல் புனித நீர் ஊர்வலம்

0பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48000 ரிஷிகள் தவம் புரிந்து வந்தனர். அவர்களது செருக்கை அடக்க சிவபெருமான் மற்றும் விஷ்ணு இணைந்து நடத்திய திருவிளையாடலின் போது சிவனை அழிக்க பல்வேறு மிருகங்களை யாகம் மூலம் தோற்றுவித்து தாருகாவனத்து முனிவர்கள் ஏவினர். இதில் முக்கியமாக யானையை உரித்து சிவபெருமான் நடனமாடி ஆடையாக அணிந்து கொண்டார். அந்த இடம் அஷ்ட வீரட்ட தளங்களில் ஒன்றான வழுவூர் என்று அழைக்கப்படுகிறது. அந்த முனிவர்கள் வசித்த புகழ்பெற்ற தாருகா வனத்தில் 54 அடி உயரத்தில் புதிதாக சிவாலயம் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. தாருகா வனத்து சித்தர் பீடம் என்று அழைக்கப்படும் இந்த நவீன ஆலயத்தின் குடமுழுக்கு விழா வரும் ஏழாம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு புனித தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரி ஆற்றின் முக்கிய கிளை ஆறான வீரசோழன் ஆற்றில் இருந்து மூன்று யானைகள் மேல் புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மங்கள வாத்தியங்கள் மற்றும் பறை இசை முழங்க ஊர்வலம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி