மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை பெற்று தராத ஒன்றிய அரசையும் வழங்க மறுக்கும் கர்நாடகா அரசையும் கண்டித்தும், காவிரி நீரின்றி குறுவை சாகுபடி மகசூலை இழுந்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிடவும், குருவை தொகுப்பு நிதி திட்டத்தில் 50% மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கிடவும், பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிப்படைந்துள்ள நெல், பருத்தி, எள், வாழை பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிடவும், கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கியுள்ள விவசாய கடன் வட்டியை தள்ளுபடி செய்திடவும், காவிரி தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஜூன் மாதத்திற்கு உண்டான நீரை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி மாவட்ட செயலாளர் வீரராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.