மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட வீரப்ப பிள்ளை தெருவில் குடியிருப்பு வீடுகளில் இன்று காலையில் குடிநீரின் தரத்தினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குடிநீரின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்