மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரணேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் 8 காலை யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்