மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடைவீதி அருகே கடந்த 21ஆம் அதிவேகமாக வந்த சொகுசு கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர், அவரது மனைவி சசிகலா மற்றும் 2 வயது மகன் பாரத் சஞ்ஜன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொறையார் போலீசார் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொறையார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர், அவரது மனைவி சசிகலா உயிரிழந்தனர். குழந்தை பாரத் சஞ்ஜன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அருள்சாலமன் என்பவரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.