திடீரென தீப்பிடித்து எறிந்த லாரியால் பரபரப்பு

68பார்த்தது
மயிலாடுதுறையில் பழுது காரணமாக மெக்கானிக் செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் லாரியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் லாரி முற்றிலும் சேதம் அடையாமல் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் இருந்த வைக்கோலை கீழே தள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி