நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த மேலவாழக்கரை காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த தம்பிராசு மகன் ரெகுபதி (69). கூலி தொழிலாளியான இவர் திருக்குவளை எஸ்பிஐ பேங்க் அருகே தனது சைக்கிளில் வந்த போது அதே திசையில் தலைஞாயிறு பகுதியிலிருந்து திருவாரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்தவர் உயிருக்கு போராடிய நிலையில், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சைக்கிளில் சென்ற முதியவர் மீது தனியார் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விபத்து ஏற்படுத்திய பேருந்தை பறிமுதல் செய்த திருக்குவளை போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.