தீச்சட்டி கடலில் விடும் நிகழ்ச்சி

1928பார்த்தது
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் கன்னிகோவில் மாசிமகத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 19ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிய கன்னிக்கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று கடலில் தீச்சட்டி விடும் வினோத வழிபாடு நடைபெற்றது. அப்போது பம்பை மேளம் முழக்கத்திற்கு ஏற்றவாறு பெண் பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.

தொடர்ந்து ஒவ்வொரு பெண் பக்தர்களும் வரிசையில் நின்று பூசாரியின் சாட்டையடிக்கு ஏற்றவாறு ஆக்ரோஷத்துடன் மெய்மறந்து சாமி வந்து ஆடினர். பின்னர் கன்னிகோவிலில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பிரம்மாண்ட தீச்சட்டியை மீனவர்கள் கைகளில் ஏந்தியவாறு கடற்கரை பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அதனை தொடர்ந்து பம்பைமேளம் முழங்க படகில் எடுத்துச் செல்லப்பட்ட பிரம்மாண்ட தீச்சட்டியை நடுக்கடலில் விட்டு மீனவர்கள் நேர்த்திகடன் நிறைவேற்றிக் கொண்டனர். அப்போது கரையில் இருந்து பக்தர்கள் அனைவரும் கடல் நீரை தலையில் தெளித்து, மீன்வளத்தையும், மீனவர்களையும் காக்க வேண்டி, மனமுருகி கடல்கன்னியை வேண்டிக் கொண்டனர்.

பின்னர் மாசி மக கன்னி கோவில் திருவிழாவை ஒட்டி சுமார் 1, மணி மணி நேரம் வான வேடிக்கை நடைபெற்றது. இதில் வானில் இடைவிடாது வர்ணஜாலம் காட்டிய வண்ணமயமான மத்தாப்பு வெடிகளை கண்டு மக்கள் ரசித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி