சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குள்ளான கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழ்வேளூர், பாப்பாகோவில், தேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்தும், அமித்ஷா மன்னிப்பு கோர வலியுறுத்தியும், பதவி விலக வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.