தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 மாணவ மாணவிகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. இதை நினைவு கூர்ந்து உயிரிழந்த சிறுவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுக்கா அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து 94 மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.