நாகை மாவட்டம் கீழ்வெண்மணி தியாகிகள் 55 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
ஒருபடி நெல்லை கூலியாக உயர்த்தி கேட்டதற்காக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட படுகொலை சம்பவத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 தலித் சமூகத்தினர் ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.
வருடா வருடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டுமில்லாமல் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனை உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் வெண்மணி நினைவு ஸ்தூபியில் பேரணியாக நாள் முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.