புதுடெல்லியை சேர்ந்த ஹர்ஷிதா பிரெல்லா (24) என்ற பெண்ணுக்கும் இங்கிலாந்தில் பணிபுரியும் பங்கஜ் என்பவருக்கும் கடந்த ஏப்ரலில் திருமணம் நடந்த நிலையில் நவம்பரில் ஹர்ஷிதாவின் சடலம் காரில் கண்டெடுக்கப்பட்டது. மனைவியை கொன்ற பங்கஜை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் "நான் அவரிடம் திரும்ப செல்ல மாட்டேன், என்னை அவர் கொன்றுவிடுவார்" என ஹர்ஷிதா தனது குடும்பத்திடம் முன்னரே சொன்னது தற்போது அம்பலமாகியுள்ளது.