முருங்கை பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இதை மிதமான சூட்டில் வறுத்து தனியாக வைக்கவும். அதேபோல் கருப்பு எள், தேங்காய் துருவலை தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு வறுக்கவும். அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதை சூடான சாதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிடலாம். ஆரோக்கியம் தரும் முருங்கைப்பூ பொடி சாதம் ரெடி.