மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று (பிப்.,11) போன் செய்த ஒருவர், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போது அவரது விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கவுள்ளதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். அப்போது, கட்டுப்பாட்டு அறைக்கு ஒரே எண்ணிலிருந்து வெவ்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பாக பல அழைப்புகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, போன் செய்த நபரை விசாரித்ததில், அவர் மனநிலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.