10 மாத காலமாக தூங்கிவிட்டு பதவியை விட்டு விலகுவேன் என நாடகமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், டங்ஸ்டன் சுரங்க திட்டம் பற்றி மத்திய அரசு வெளியிட்டிருக்கும் விளக்க குறிப்பு திமுக அரசின் இரட்டை வேட முகத்திரையை கிழிக்கும் வகையில் உள்ளது. அனைத்து விவரங்களையும் வழங்கி, உறுதுணையாக இருந்துவிட்டு மக்கள் எதிர்ப்புக்கு பின் முதலமைச்சர் கபடநாடகம் நடத்தியுள்ளார் என கூறியுள்ளார்.