அமெரிக்காவின் புளோரிடா நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா - அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 7-5, 6-2 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது அரினா சபலென்கா வென்ற முதல் மியாமி ஒபன் பட்டம் ஆகும்.