வரும் ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது, மாறாக சிங்கார சென்னை அட்டை வாங்க பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மட்டுமல்லாமல், புறநகர் ரயில்கள், மாநகர பேருந்துகளில் பயணம் செய்யலாம். ஷாப்பிங், ஹோட்டல் பில்களைக் கூட சிங்கார சென்னை கார்டை பயன்படுத்தி செலுத்தலாம். இந்த கார்டு மூலம் இந்தியா முழுவதும் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். கவுன்டர்களில் கார்டு இலவசமாக தரப்படுகிறது.