புதுச்சேரியில் மார்க்கெட் கமிட்டி அமைக்கப்பட்டு, விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை அதன்மூலம் கொள்முதல் செய்து வந்தனர். சில காரணங்களால் இந்த மார்க்கெட் கமிட்டி 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. இந்த நிலையில் வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விவசாயிகள் மீண்டும் மார்க்கெட் கமிட்டியில் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.