காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை அடைந்ததும், அங்கு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து, காலை 11.45 மணியளவில் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.