தென்கிழக்கு ஐரோப்பாவில், பால்கன் தீபகற்பத்தில் மாண்டினீக்ரோ என்ற நாடு உள்ளது. இங்குள்ள செட்டின்ஜே நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. 45 வயதான நபர் ஒருவர், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 10 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்நபர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது 2 குழந்தைகளையும் சுட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.