உத்தரப்பிரதேசத்தில் வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துவிட்டு, கைகளை கழுவாமல் உணவு உண்ட கன்ஹையா(27) என்ற இளைஞர் உயிரிழந்தார். உரம் தெளித்துவிட்டு வந்திருக்கிறீர்கள் கைகளை கழுவுங்கள் என அவரின் மனைவி எவ்வளவோ கூறியபோதும் அதனை ஏற்காமல் உணவை சாப்பிட்டுள்ளார். பின் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.