இளைஞரை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது

85பார்த்தது
சென்னை ஆவடியில் இளைஞரை கட்டி போட்டு கத்தியால் காயப்படுத்தி, இருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியாக சென்ற இளைஞரை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, தலைமறைவாக உள்ள பிரவீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி