மாமூல் கொடு.. டீக்கடைக்காரரிடம் மாமுல் பெறும் காகம்!

71176பார்த்தது
புதுச்சேரி மாநிலத்தில் டீக்கடைக்காரரிடம் தினமும் காக்கை ஒன்று பாலாடை ஏடு பெற்று செல்லும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம் லாசுப்பேட்டை உழவர் சந்தை அருகே ரவிச்சந்திரன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது டீக்கடைக்கு தினமும் காலையில் வரும் காகம் பால் ஏட்டை சாப்பிட்டு செல்கிறது. மேலும், காகம் பிஸ்கட், சமோசா போன்றவற்றை வைத்தால் சாப்பிடுவதில்லை என கூறுகிறார். இது தொடர்பான வீடியோவில், டீக்கடைக்கு வரும் காக்கா கா.. கா.. என கரைகிறது. இந்நிலையில், டீக்கடைக்காரர் பாலாடை ஒரு கப்பில் வைக்க அதனை காகம் எடுத்து செல்கிறது.

தொடர்புடைய செய்தி