மகாளய அமாவாசை அன்று பலரும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் செல்வது வழக்கம். இந்த நிலையில், வரும் 14 ஆம் தேதி மகாளய அமாவாசை. இதை முன்னிட்டு, தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 13 ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, பெங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.