உசிலம்பட்டி: மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி

56பார்த்தது
உசிலம்பட்டி: மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, சாப்டூர் 4வது வார்டைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் முனியாண்டி (45) என்பவர் நேற்று (மே. 9) வண்டாரியிலுள்ள செங்கல் காளவாசலுக்கு மண் குழைத்து கொடுக்கும் வேலைக்கு சென்றிருந்தார். 

அங்கு மதிய உணவு நேரத்தில் அவர் கை, கால்களை அங்கிருக்கும் டிரம்மிலிருந்த தண்ணீரில் கழுவியபோது அருகிலிருந்த இரும்பு பைப்பை தொட்டபோது, அதில் இருந்த மின்சாரம் முனியாண்டியை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வந்த சாப்டூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி