உசிலம்பட்டி: விபத்தில் மறைந்த இராணுவ வீரருக்கு அரசு மரியாதை

84பார்த்தது
உசிலம்பட்டி: விபத்தில் மறைந்த இராணுவ வீரருக்கு அரசு மரியாதை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம். கல்லுப்பட்டியை அடுத்துள்ள எம். எஸ். புரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரது மகன் இன்பராஜ், 2016 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் சேர்ந்த இளைஞர் தற்போது அசாம் மாநிலம் நிஹாம்பள்ளி முகாமில் இந்திய இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி மலை பகுதியில் உள்ள தங்களது முகாமிற்கு இராணுவ வாகனம் மூலம் உணவு எடுத்து செல்லும் போது இவர்கள் சென்ற இராணுவ வாகனம் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்இன்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் எம். கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இராணுவ வீரரின் உடல் நேற்று (டிச. 25) சொந்த ஊரான எம். எஸ். புரத்திற்கு கொண்டு வரப்பட்டது, அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார், தொடர்ந்து உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், உசிலம்பட்டி, சேடபட்டி பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், கோவை மற்றும் விருதுநகர் 28 வது என். சி. சி பட்டாலியன் படையிலிருந்து வந்திருந்த கர்னல்கள் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 8 இராணுவ வீரர்கள் 24 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி