மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் கீழ தெருவில் வசிக்கும் மாசாணம் மகன் முத்து இருளாபாபு (22) என்பவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் நண்பர்கள் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தந்தை நேற்று (டிச. 27) மதியம் உசிலம்பட்டி தாலூகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.