மதுரை மாவட்டம், வடுகபட்டி நித்யா நகரில் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வரும் பூமிராஜன் என்பவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதில் உசிலம்பட்டி ஆர்.சி. பள்ளியில் மூத்த மகள் 8ம் வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது மகள் ரித்திகா (9) என்பவர் 4வது வகுப்பு படித்தார்.
நேற்று (மார்ச் 19) காலை அக்கா, தங்கை இருவரும் மதுரை ரோட்டிலிருந்து உசிலம்பட்டிக்கு டிரைவர் ராஜா (22) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்றனர். அப்போது கருமாத்தூர் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் பண்ணைப்பட்டி பிரதீப்குமார் (21) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஆட்டோவில் மோதியதில் ரித்திகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.