உசிலம்பட்டி: அரசு பள்ளியின் நூற்றாண்டு பொன் விழா கொண்டாட்டம்

85பார்த்தது
உசிலம்பட்டி: அரசு பள்ளியின் நூற்றாண்டு பொன் விழா கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு பொன்விழா நேற்று (மார்ச். 14) கொண்டாடப்பட்டது. இந்தப் பள்ளி 1924-ல் தொடங்கியது. 2025-ம் ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடும் பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். 

பங்கேற்றவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி தலைமையாசிரியர் இந்துமதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி